உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி நூல் வெளியீடு

அன்பிற்கினிய வலைவழி உறவுகளே!

https://seebooks4u.blogspot.com/2017/08/blog-post.html
வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக மின்நூல்களை வெளியிட முன்வந்திருக்கிறது. இவற்றை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாகப் (இலவசமாகப்) பகிரவுள்ளோம். “மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017” என்னும் முயற்சியில் இரண்டு மின்நூல்களை வெளியிடுவதில் மகிழ்வடைகின்றோம்.

  1. செம்மொழியாம் தமிழைக் காப்போம்
  2. உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி – 01

மேற்காணும் இரண்டு மின்நூல்களில் பதினான்கு அறிஞர்களுக்கும் அதிகமானோர் தமது எண்ணங்களைப் பகிர்ந்துள்ளனர். இவ்விரண்டு மின்நூல்களிலும் தமிழின் தொன்மை, தமிழின் எதிர்காலம், உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி எனப் பல  ஆய்வுப் பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. வாசகர் கருத்துகள் இணைக்கப்பட்டிருக்கிறது. சிறந்த தமிழ் அறிஞர்கள் மதிப்புரை வழங்கியுள்ளனர். இவ்விரண்டு மின்நூல்களையும் கருத்திற்கொண்டு பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வினைச் செய்ய பயனுள்ள தகவல் நிறையவே உண்டு.

தமிழ் பேசும் மக்கள் வாழும் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இவ்விரண்டு மின்நூல்களையும் பத்து நூறாயிரத்திற்கு (இலட்சத்திற்கு) அதிகமான வாசகர்கள் வாசிக்கும் வண்ணம் வலைப்பதிவர்கள் எல்லோரும் இவற்றைப் பகிர்ந்து உதவுங்கள். திறனாய்வாளர்கள் எல்லோரும் இவ்விரண்டு மின்நூல்களுக்கும் வலுச்சேர்க்கும் முகமாகத் தங்கள் திறனாய்வினைத் தந்துதவுங்கள். பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் உயர்நிலைக் கல்லூரி, பாடசாலை ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களை வாசிக்கத் தூண்டவும் பலருக்குப் பகிரச் செய்யவும் உதவுங்கள்.

வலை வழி ஊடகங்களும் இலத்திரனியல் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும் இவ்விரண்டு மின்நூல்களின் உயர்ந்த நோக்கத்தையும் உயர்ந்த எண்ணங்களையும் பகிர்ந்து உதவுங்கள். இவ்வாறு இவ்விரண்டு மின்நூல்களுக்கும் கிடைக்கும் ஆதரவினை வைத்து நன்கொடையாளர்களின் உதவியினைப் பெற்று நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் உள்ள பொது நூலகங்களுக்காவது இலவசமாக அச்சடித்து இந்நூல்களை வழங்க முடியுமென நம்புகின்றோம். இதற்கு மேல் நானுரைப்பது அழகல்ல; நூல்களைப் பதிவிறக்குங்கள்; நூல்களுக்குள் புகுந்து தேடல்களைச் செய்யுங்கள்; உங்கள் எண்ணங்களைப் பகிருங்கள்.

 

 

 

 

 

 

 

இலகுவாகக் குளிர்மையாகப் பார்வையிட
http://fliphtml5.com/homepage/mjnyg

வழமையாகப் பார்த்துப் பதிவிறக்க
https://app.box.com/s/a89mh19jwuaqr2oneom4u8sh3v1qwc8u

உலகெங்கும் வலைவழியே நற்றமிழைப் பரப்பிப் பேண ஒன்றிணைவோம்.

கால நீடிப்பு – மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017

May 15 ஆம் நாள் வரை இம்மின்நூலுக்கான உங்கள்
பதிவுகளை அனுப்பி வைக்கலாம் என்பதை
அறியத்தருகின்றோம். அதாவது, 16/05/2017 இற்கு முன்னதாக
உங்கள் பதிவுகளை அனுப்பிவைக்க வேண்டும்.

இம்மின்நூலை வெளியிடுவதற்கு அனுப்பி வைக்கப்பட்ட
ஒன்பது அறிஞர்களின் பதிவுகளை அவர்கள் அனுப்பிவைத்த
ஒழுங்கில் கீழே தருகின்றோம்.

1. தமிழ் மொழி கட்டுரை – ஆசோகன் குப்புசாமி
இணைப்பு: http://kavithaigal0510.blogspot.com/2016/03/blog-
post_18.html

2. தமிழும் தாய் மொழியும் – ஜி.எம்.பாலசுப்பிரமணியம்
இணைப்பு: http://gmbat1649.blogspot.com/2017/03/blog-
post_27.html

3. உயர்தனிச்செம்மொழி தமிழ் – முனைவர் இரா.குணசீலன்
இணைப்பு: http://www.gunathamizh.com/2009/04/blog-
post_01.html

4. இன்னும் 100 வருடங்களில் தமிழ்மொழி அழிந்துவிடுமா? –
பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா
இணைப்பு: http://www.tamilauthors.com/01/31.html

5. தமிழ் மொழியின் தொன்மை – பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா
இணைப்பு: http://www.tamilauthors.com/01/46.html

6. உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே! – அபிநயா சிறிகாந்
இணைப்பு: http://abinayasrikanth.blogspot.com/2017/04/blog-
post_22.html

7. உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே – உமா
நாராயணன்
இணைப்பு: http://umanarayanan.blogspot.ae/2017/04/blog-
post_55.html

8. முதற்றாய்மொழி: சில புரிதல்கள் – முனைவர் த.சத்தியராஜ்
இணைப்பு: http://meyveendu.blogspot.in/2017/04/blog-
post_2.html

9. தமிழ் மொழி உலகில் முதலில் தோன்றியதா? –
யாழ்பாவாணன்
இணைப்பு: http://www.ypvnpubs.com/2017/04/blog-post_30.html

மேலதீக விரிப்புக்கு https://seebooks4u.blogspot.com/
இவ்விணைப்பைச் சொடுக்குக.

தமிழ் மொழி உலகில் முதலில் தோன்றியதா?

“முந்தைய உலகில் 7500 இற்கு மேற்பட்ட மொழிகள் இருந்தனவாம்… பின்மொழிகள் அழிந்து வரலாயிற்று. 1950 இற்கு முன் 4500 இற்கு மேற்பட்டமொழிகள் இருந்தனவாம்… 2000 இற்கு முன் 2500 இற்கு மேற்பட்டமொழிகள் இருந்தனவாம்… 2020ஆம் ஆண்டுக்கு பின் 1500 இற்கும்குறைந்த மொழிகள் இருக்குமாம்… 2040ஆம் ஆண்டுக்கு பின் 150 இற்கும்குறைந்த மொழிகள் இருக்குமாம்…” என்றொரு தகவலை 2000ஆம்ஆண்டில் இலங்கை வானொலியில் கேட்ட நினைவுண்டு.

இப்படிப் போனால் தமிழ் மொழியும் அழிந்து விடும் என அஞ்சுகின்றனர். இன்னும் முப்பது ஆண்டுகளில் அழியவிருக்கும் மொழிகளின் விரிப்பில் (List) தமிழ் மொழியும் இருப்பதாக ஐ.நா. அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் “தமிழ் மொழி உலகில் முதலில் தோன்றியதா?” என்றால் நிறைவான பதிலை எட்ட முடியாது இருக்கும். வலைவழியே உலகில் முதலில் தோன்றியது தமிழ் மொழி என்று பலரும் கருத்துப் பகிருகின்றனர்.

மின்நூல் வெளியீட்டிற்காக ஆக்கிய படைப்பு. இதனை முழுவதும் படிக்க கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி உங்கள் மதியுரையினத் தாருங்கள்.

http://www.ypvnpubs.com/2017/04/blog-post_30.html

உலகின் முதன் மொழி தமிழாகுமா?

சுமேரிய மொழியா? வட மொழியா? தமிழ் மொழியா? உலகில் முதலில் தோன்றியது எனப் பட்டிமன்றம், வழக்காடு மன்றம் நடத்துவோரும் நம் மத்தியில் இருக்கலாம். அவர்களுக்காக உலகின் முதன் மொழி தமிழென்று சொல்லிவைக்கக் கீழ்வரும் இணைப்புகளைப் பொறுக்கித் தந்துள்ளேன்.

https://plus.google.com/+Tamilthoguppuofficial/posts/EuNQVFhG5Wq
http://indiatoday.intoday.in/education/story/oldest-languages/1/481033.html
http://www.wipjobs.com/what-are-the-7-worlds-oldest-languages/
http://www.worldblaze.in/top-10-oldest-languages-in-the-world/
http://www.worldblaze.in/top-10-oldest-languages-in-the-world/2/
https://www.quora.com/What-are-the-oldest-languages-in-the-world

மேற்காணும் இணைப்புகளைச் சொடுக்கிப் பார்த்து உறுதிப்படுத்திய பின், தமிழ் இலக்கிய எடுத்துக்காட்டுகளை முன்வைத்து “உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!” என்ற மின்நூலுக்கான பதிவை எழுதித் தங்கள் வலைப்பூவில் பதிந்த பின்னர் அதன் இணைப்பை எமக்கு அனுப்பி வைத்து உதவுங்கள். மேலதிகத் தகவலுக்கு: https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

என் பதிவுக்குக் கிட்டிய தாக்குரை (Condemn)

முகநூல் (Facebook) பக்கம் எட்டிப் பார்த்ததால் – என்
வலைப்பூப் (Blog) பக்கம் எட்டிப் பார்த்தவரால் – என்
பதிவுக்குக் கிட்டியதே தாக்குரை (Condemn)! – அதில்
வேண்டிக் கட்டியது நானென்று அறிவீரோ!

இந்தப் பதிவுக்கு முன் முகநூலில் (Facebook) நடந்ததைச் சொல்கிறேன். வழக்கம் போல முகநூல் (Facebook) பக்கம் எட்டிப் பார்த்த வேளை “வடக்கில் ”ஏறாவூர்” எங்கு உள்ளது?” என்ற பதிவைக் கண்டேன். உண்மையில் ”ஏறாவூர்” என்ற ஊர் மட்டக்களப்பு நகரிலிருந்து 10km இற்கு அப்பால் இருப்பதை நானறிவேன். ஆயினும் குறித்த பதிவுக்கு

“இடம் பெயர்ந்த மக்கள்
மீளக் குடியமராத இடங்கள்
எல்லாமே – அவர்களுக்கு
ஏறாவூர் தானே!
இவை
வடக்கிலும் கிழக்கிலும் இருக்கே!”

என்றவாறு பதில் கருத்தும் இட்டிருந்தேன். இந்த நிலை தான் இலங்கைத் தமிழர் வாழ்க்கை. இதனைச் சுட்டிக் காட்டவே அப்படி எழுதியிருந்தேன். இதனைப் படித்த ஏறாவூர் படைப்பாளிகள் எவரேனும் என்னைத் தாக்கவில்லை.

ஆயினும்,……………………….
இப்பதிவை முழுமையாகப் படிக்க…
http://www.ypvnpubs.com/2017/04/condemn.html

உலகின் முதன் மொழி தமிழா?

துளித் துளித் தகவலாக வலைவழியே “உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!” என்று பரப்புவதால் வலையுலகில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடாது. எனவே, பல அறிஞர்களின் கூட்டு முயற்சியாக “உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!” என்ற மின்நூலை வெளியிட்டு வலையுலகில் வலுவான மாற்றத்தை ஏற்படுத்தலாமென நம்புகிறேன்.

“உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!” என்ற மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறோம். இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இந்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம். தகவல்: https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

“உலகின் முதல் மொழி தமிழா?” என்றால் “இல்லை” என அறிஞர் ஒருவர் பதில் தருகின்றார். அவரது பதிவைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://writerasai.blogspot.com/2013/05/blog-post_5684.html

தமிழ் மொழி பற்றிய தகவலை அறியக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
https://ta.wikipedia.org/s/145

“தமிழர் வரலாறு -Tamils History” பற்றியறியக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://tamilmoli4u.blogspot.com/2014_04_01_archive.html

“தமிழ் 1,00,000 ஆண்டுகள் பழமையானதா?” என்ற உண்மையை அறியக் கீழ்வரும்இணைப்புகளைச் சொடுக்குக.
http://subadhraspeaks.blogspot.in/2013/06/is-tamil-100000-years-old.html
http://subadhraspeaks.blogspot.com/2013/06/how-tamil-is-claimed-to-be-mother-of.html

வலைவழி உறவுகளே! உங்கள் பதிவோ உங்களது நட்பு அறிஞர்களின் பதிவோஒன்றிணைந்து “உலகின் முதன் மொழி தமிழா?” என்ற மின்நூல் அழகுற வெளிவரஉதவுங்கள்.

இவ்வண்ணம்
தங்கள் உதவியை நாடும் யாழ்பாவாணன்

மேலதீகத் தகவலுக்கு: https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html
http://www.ypvnpubs.com/2017/03/blog-post_24.html

மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017

வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக “உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!” என்ற மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இந்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.

சிறந்த மூன்று பதிவுகளுக்குப் பரிசில் வழங்குகின்றோம். அதாவது, நன்நூல்.கொம் ஊடாகத் தாங்கள் விரும்பிய நூல்களைப் பெறப் பத்து டொலர் பெறுமதியான Gift Certificates சிறந்த மூன்று பதிவுகளை அனுப்பிய ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும்.

தாங்கள் விரும்பிய தலைப்பில் முன்கூட்டியே எழுதிய பதிவாகவோ புதிதாக எழுதிய பதிவாகவோ இருந்தாலும் வலைப்பதிவர்கள் தங்கள் பதிவுகளை தங்கள் வலைப்பூக்களில் வெளியிட்ட பின்னர், அதற்கான இணைப்பை wds0@live.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

விரிப்பை அறிய இணைப்பைச் சொடுக்குக.
https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

இடம் கண்டால் மடம் கட்டிப் போடுவாங்களே!

அள்ள, அள்ள வற்றாத அன்பளிப்புகள் (இலவசங்கள்) இணையத்தில் உலாவுகின்றன. அவற்றில் கெட்டவற்றைக் களைந்து நல்லவற்றை உறிஞ்சிப் பலர் நன்மை அடைகிறார்கள் என்றால் அது செய்தி தானே!
இணைய அன்பளிப்பு (இலவச) வளங்களைப் பாவித்துத் தத்தம் திறமைகளை நல்ல தமிழில் உலகம் எங்கும் வெளிப்படுத்த முன்வர வேண்டுமே!

தமிழனென்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா என்பது
அந்தக்காலம்!
தமிழனென்று சொல்லடா
இணைய வழி
தமிழன் நிலையை வெளிப்படுத்தடா என்பது
இந்தக்காலம்!
பிறமொழி ஆடை, அணிகலன்களை
களைந்து (உரிந்து) போட்டு
உள்ளிருக்கும் உறுப்புகளான
வேர்த்தமிழ் சொல் அடுக்கி
வெளியீடு செய்வதே – தமிழுக்கு
நல்லெதிர்காலம்!

இப்பதிவினை முழுமையாகப் படிக்கக் கீழே சொடுக்குக.
http://www.ypvnpubs.com/2017/03/blog-post_7.html

நாற்காலியைக் கேளுங்கள்

நான் கூகிளில் தேடிப் பொறுக்கிய படங்களில் இருந்து உருவாக்கிய நாற்காலி படம் தான் இங்கே காண்கிறீர்கள்.

நாற்காலிக்கு நாற்காலி அமருவோர் வேறு
நாற்காலியில் அமர்ந்தோரின் ஆளுமையும் வேறு
நாற்காலிகளில் இருந்தவர்களைப் பற்றியறிய

இப்பதிவை முழுமையாகப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://www.ypvnpubs.com/2017/03/blog-post_4.html

மாதகலூர் முரல் மீன் சுவையில…

https://www.facebook.com/mathagal1net/media_set?set=a.190851131402670.1073741913.100014333532099&type=3&pnref=story

எனது ஊர்க் கடலில் இரவு வேளை புரட்டாதி மாதத்தில தேறை மீனும்
மாசி மாதத்தில முரல் மீனும் பிடிப்பார்கள். அதனை வேண்டி வந்து பால் சொதி வைத்து பிட்டோ இடியப்பமோ சோறோ ஏதாவது ஒன்றோட சாப்பிடுவோம். அந்த நினைவோடு தகவலும் படங்களும் என் உள்ளத்தில் எழுதத் தூண்டியது. அதன் விளைவு “மாதகலூர் முரல் மீன் சுவையில…” என்ற தலைப்பில என்னை எழுதவைத்தது. அதனை முகநூலில (Facebook) ஏற்கனவே பகிர்ந்துவிட்டேன். எனது வலைப்பூ வாசகர்களுக்காக அதனைக் கீழே தருகின்றேன்.

வாங்க… வாங்க…
மாதகலூரிற்கு வாங்க…
மாசி பனி மூசிப் பெய்ய
ஆணும் பெண்ணும்
ஆளை ஆள் அணைத்த படி
ஏட்டிக்குப் போட்டியாக ஓடிப் போறாங்க…
மாதகல்துறை, சம்பில்துறை, குசுமந்துறை
எங்கு பார்த்தாலும் எட்டிப் பார்த்தாலும்
முரல் மீனுக்கு முண்டியடிக்கிறாங்க…

முழுவதும் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://www.ypvnpubs.com/2017/03/blog-post.html